தைலம் குடித்த பெண் பரிதாப சாவு
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
மருந்து என நினைத்து தவறுதலாக தைலத்தை குடித்த பெண் பரிதாபமாக இறந்தார்.
நெல்லை, பாளையங்கோட்டையைச் சேர்ந்த அருள்குமார் ராஜன். இவரது மனைவி விசாலி.
கடந்த சில மாதங்களாக விசாலி இருமல் நோயால் கடும் அவதிப்பட்டு வந்தார். இதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த 27ம் தேதி இவர் இருமல் மருந்துக்கு பதில் தவறுதலாக கால் வலிக்காக தேய்க்கப்படும் தைலத்தை எடுத்து குடித்துவிட்டார்.
இதனால் அவரது கை-கால்கள் செயலிழந்தன. அவரை சிகிச்சைக்காக நெல்லை வண்ணார்பேட்டை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிக்சை பலன் அளிக்காமல் விசாலி பரிதாபமாக இறந்தார்.












Click it and Unblock the Notifications