மூளையில் அடைப்பு - ரியாத்தில் அவதிப்படும் புதுக்கோட்டை வாலிபர்
ரியாத்:
ரியாத்தில் வேலை பார்த்து வரும் புதுக்கோட்டையைச் சேர்ந்த வாலிபர், மூளையில் அடைப்பு ஏற்பட்டு உயிருக்குப் போராடி வருகிறார்.
புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் அப்பாஸ் காஜா முஹைதீன்.
மூளையில் அடைப்பு ஏற்பட்டு ஒரு பக்கம் வாதத்தால் பாதிக்கப்பட்டு ரியாத் சுமேஷி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்,
ரியாத்தில் தனது ஸ்பான்சர் வீட்டில் டிரைவராக வேலை பார்த்து வந்தார் முஹைதீன். தற்போது மூளையில் அடைப்பு ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு அந்த ஸ்பான்சர் உதவ முன்வரவில்லை.
இதையடுத்து அவரை இந்தியாவிற்கு அனுப்பி வைக்க வேண்டி சில நல் உள்ளம் கொண்ட சகோதரர்கள் முயற்சி செய்து இதுவரை 3000 ரியால் நன்கொடையாக சேர்த்துள்ளனர்.
அவருக்கு நல்ல உள்ளம் படைத்தோர் உதவ வேண்டும் என தஃபர்ரஜ் (TAFAREG) உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.
உதவ விரும்புவோர் திரு. ஜாகிர் ஹூசேனை 0509457811 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications