For Daily Alerts
Just In
இன்று பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் தர்ணா
சென்னை:
நாடு முழுவதும் 3.5 லட்சம் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இன்று தர்ணா போராட்டத்தை நடத்துகின்றனர்.
இதுகுறித்து தமிழக போராட்டக் குழு செயலாளர் குணசேகரன் கூறுகையில், டெல்லியில் கடந்த 7ம் தேதி நடந்த ஆலோசனை கூட்டத்தில், 2ஜி, 3ஜி ஜிஎஸ்எம் இணைப்புகள் கொடுப்பது, பிஎஸ்என்எல்-க்கு ஸ்டார் அந்தஸ்து பெறுவது மற்றும் ஊழியர்களின் சம்பள உயர்வு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்திு தர்ணா போராட்டம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி 11ம் தேதி நாடு முழுவதும் 3.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தர்ணா மேற்கொள்வர்.
போராட்டம் தீவிரமாவதற்கு முன்பு அரசு உரிய நடவடிக்ைக எடுக்க வேண்டும். எங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற முன்வராவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்றார்.
Story first published: Saturday, December 15, 2007, 21:38 [IST]