நகராட்சி தலைவியை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டி:
கோவில்பட்டி அதிமுக கவுன்சிலர் ராமர் மீது பொய் புகார் கொடுத்த நகராட்சி தலைவி மல்லிகாவை கண்டித்தும், வழக்கை வாபஸ் பெறக் கோரியும், நகர அதிமுக மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட மகளிரணி துணைச் செயலாளர் கவுசல்யா தலைமை வகித்தார். வார்டு கவுன்சிலர்கள் பத்மாவதி, விமலாதேவி முன்னிலை வகித்தனர். மாவட்ட இணைச் செயலாளர் விஜயலட்சுமி வரவேற்றார். தொகுதி எம்.எல்.ஏ ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். இதில் மகளிரணியினர் 500 பேர் கலந்து கொண்டனர்.
இதற்கிடையே, சர்ச்சைக்குரிய கவுன்சிலர் ராமரைக் கைது செய்யக் கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கோவில்பட்டி தாலூகா அலுவலகம் முன்பு நடந்த தர்ணாவிற்கு மாவட்ட செயலாளர் ருக்மணி தலைமை வகித்தார். தர்ணாவை துவக்கி வைத்து மாநில செயலாளர் வாசுகி பேசினார்.
நகராட்சித் தலைவியை இழிவுபடுத்திப் பேசிய ராமரைக் கண்டித்தும், உடனடியாக அவரைக் கைது செய்ய வேண்டும் என்று கோரியும் கூட்டத்தினர் கோஷமிட்டனர்.
கோவில்பட்டி, சாத்தூர், மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கயத்தாறு, கழுகும்லை, விருதுநகர், எட்டையாபுரம், சிவகாசி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஆயிரத்து 500 பெண்கள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications