நடிகை வீட்டில் விபச்சாரம்-சித்த வைத்தியர், 2 பெண்கள் கைது
சென்னை:
சென்னையில் பிரபல நடிகையின் வீட்டை வாடகைக்கு எடுத்து மசாஜ் கிளப் என்ற பெயரில் விபச்சாரம் நடத்தி வந்த சித்த வைத்தியர் மற்றும் 2 பெண்களைப் போலீஸார் கைது செய்தனர்.
சென்னை நகரில் உள்ள மசாஜ் கிளப்களில் போலீஸார் அதிரடியாக சோதனை நடத்தி அங்கு விபச்சாரம் செய்வோரைப் பிடித்து வருகின்றனர்.
இந் நிலையில் சாலிகிராமம் கண்ணாத்தாள் தெருவில் கேர் அண்ட் க்யூர் என்ற பெயரில் அமைந்த சித்த வைத்திய மசாஜ் கிளப்பில் விபச்சாரம் நடப்பதாக விபச்சாரத் தடுப்புப் போலீஸாருக்குத் தகவல் வந்தது.
இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்தனர். அப்போது அங்கு மசாஜ் என்ற பெயரில் வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுத்து விபச்சாரம் நடப்பது தெரிய வந்தது.
இதையடுத்து கேரளாவைச் சேர்ந்த சிந்து, நாகர்கோவிலைச் சேர்ந்த பொன்னி கைது செய்யப்பட்டனர். அந்த கிளப்பில், ஏராளமான ஆணுறைகள் குவியல் குவியலாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த மசாஜ் கிளப்பை நடத்தி வந்தவர் சித்த வைத்தியர் டாக்டர் ராஜசீலன். அவரையும் போலீஸார் கைது செய்தனர். இவர் ஏற்கனவே நாகர்கோவிலில் இதுபோல மூலிகை வைத்தியம் பார்த்து வந்தார். அங்கு சரியான வருமானம் இல்லாததால் சென்னைக்கு வந்து விபச்சார டாக்டராக மாறியுள்ளார்.
டாக்டர் ராஜசீலன் கிளப் போர்வையில் விபச்சாரம் நடத்தி வந்த வீடு, பிரபல நடிகை ஒருவருக்குச் சொந்தமானதாகும்.
அவருக்கு மாதம் ரூ. 10 ஆயிரம் வாடகை கொடுத்து வந்துள்ளார் ராஜசீலன். அந்த நடிகைக்கு இந்த விபச்சார கிளப்பில் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்று போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications