காதலனுடன் மணப்பெண் ஓட்டம்

Subscribe to Oneindia Tamil


நாகர்கோவில்: நாகர்கோவிலில் இன்று திருமணம் நடைபெறவிருந்த மணப்பெண் காதலனுடன் ஓடிவிட்டார்.

நாகர்கோவில் ஒழுகினசேரியை சேர்ந்தவர் ஈஸ்வரி. இவருக்கும் ஆரல்வாய்மொழியை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இவர்கள் திருமணம் இன்று காலை மணமகள் வீட்டில் நடைபெற இருந்தது.

இந் நிலையில் நேற்று மாலை திடீரென மணமகள் ஈஸ்வரியை காணவில்லை. இது மணமகன் வீட்டாருக்கும் தெரிய வரவே அவர்களும் உடனடியாக ஒழுகினசேரி வந்தனர். திருமண வீடோ சோக மயமானாது.

போலீசில் புகார் தரப்பட்டது. போலீசாரின் விசாரணையில் தனது உறவினர் மகன் சதீஷ் என்பவருடன் ஈஸ்வரி ஓடிப் போனது தெரியவந்தது. ஈஸ்வரியின் நெருங்கிய உறவினர் தான் சதீஷ். மெக்கானிக்கான இவருக்குத் தான் முதலில் ஈஸ்வரியை திருமணம் செய்து பேச்சு நடந்தது.

ஆனால் சதீஷ் வீட்டில் கேட்ட வரதட்சணையை ஈஸ்வரியின் பெற்றோரால் கொடுக்க முடியாததால் மகளை வேறு இடத்தில் திருமணம் செய்து கொடுக்க முடிவு செய்தனர்.

ஆனால் ஈஸ்வரி-சதீஷ் இடையே காதல் அரும்பிவிட்டதால் திருமணத்தை ஏற்க முடியாமல் ஓடிப் போய்விட்டது தெரியவந்துள்ளது.

இது குறித்து நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+