பள்ளிகள் அருகே இருந்த 132 டாஸ்மாக் கடைகள் மூடல்
சென்னை: தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள 132 டாஸ்மாக் மதுக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை மண்டலத்தில் 22 கடைகளும், மதுரை மண்டலத்தில் 32 கடைகளும், கோவை மண்டலத்தில் 13 கடைகளும், சேலம் மண்டலத்தில் 33 கடைகளும், திருச்சி மண்டலத்தில் 32 கடைகளும் மூடப்பட உத்தரவிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நலனை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர கடந்த 6 மாதங்களில் மொத்தம் 82 கடைகள் மூடப்பட்டுள்ளன. பொதுமக்களிடமிருந்து வந்த அதிருப்தியை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுதவிர போலி மதுவை விற்பனை செய்ததாக வந்த புகாரைத் தொடர்ந்து ஆங்காங்கு சில மதுக் கடைகள் மூடப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் மொத்தம் 6700 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications