டெல்லி விமானத்தில் பலியான சென்னை பயணி
சென்னை: டெல்லியில் இருந்து சென்னை வந்த விமானத்தில் நடுவானில் பயணி மரணமடைந்தார்.
சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த நரசிம்மன் (52) தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து விருப்ப ஓய்வு பெற்றவர். இவரது மகள் மைதிலி துபாய்க்கு வேலைக்கு செல்ல இருக்கிறார்.
மைதிலிக்கு குடியுரிமை சான்று பெற நரசிம்மனும் மைதியிலும் டெல்லி சென்றனர். அங்கு நரசிம்மனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் அவசரமாக இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னை புறப்பட்டனர்.
நடுவானில் நரசிம்மன் உறங்கிவிட்டார். சென்னையில் விமானம் தரையிங்கியபின் தந்தையை மைதிலி எழுப்பினார். ஆனால், அவர் எழவில்லை. இதையடுத்து விமான நிறுவன ஊழியர்களும், விமான நிலைய டாக்டர்களும் விரைந்து வந்து அவரை சோதனையிட்டனர்.
அப்போது நரசிம்மன் இறந்துவிட்டது தெரியவந்தது.
இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்ப விமான நிலைய போலீசார் முயன்றனர். ஆனால், அதற்கு மைதிலி எதிர்ப்பு தெரிவித்து கதறியழுதார். அவரை அதிகாரிகள் சமாதானம் செய்து நரசிம்மன் உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச் சம்பவம் குறித்து சென்னை விமான நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications