துபாய்: 6வது மாடியிலிருந்து விழுந்து இந்தியப் பெண் மரணம்
துபாய்: துபாயில், ஆறு மாடிக் கட்டடத்திலிருந்து விழுந்து இந்தியத் தொழிலதிபரின் மனைவி உயிரிழந்தார்.
டெய்ரா என்ற இடத்தில் உள்ள பானி யாஸ் ஸ்கொயர் பகுதியில் எமிரேட்ஸ் வங்கி உள்ளது. இந்த வங்கிக்கு அருகே ஷேக் லத்தீபா கட்டடம் உள்ளது. இந்தக் கட்டடத்தின் 6வது மாடியிலிருந்து அந்தப் பெண் விழுந்து இறந்தார்.
இவருக்கு வயது 38. இவரது கணவர் ஒரு தொழிலதிபர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
இதுகுறித்து அவரது குடும்பத்தினர் கூறுகையில், பால்கனியில் நின்றபடி புறாவுக்கு இரை போட்டுக் கொண்டிருந்தார். அவர் நின்று கொண்டிருந்த பால்கனியின் மரத் தளம் உடைந்துள்ளது. இதனால்தான் அவர் கீழே விழுந்து விட்டார் என்று கூறியுள்ளனர்.
அவர் தற்கொலை செய்து கொண்டிருக்க வாய்ப்பே இல்லை எனவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அந்தப் பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் எந்தவித பூசலும் இல்லை, இருவரும் சந்தோஷமாகத்தான் வாழ்ந்து வந்தனர் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
துபாய் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications