கொடைக்கானல் தெரசா பல்கலை விழா-பிரதீபா வருகை
Subscribe to Oneindia Tamil
சென்னை: குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் வருகிற நவம்பர் 2ம் தேதி சென்னை வருகிறார். கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.
நவம்பர் 2ம் தேதி முற்பகல் 11.30 மணிக்கு திருவனந்தபுரத்திலிருந்து விமானப் படை விமானத்தில் பிரதீபா சென்னைக்கு வருகிறார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
பின்னர் கார் மூலம் கலைவாணர் அரங்கத்திற்கு பிரதீபா அழைத்து வரப்படுகிறார். அங்கு நடக்கும் கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அவர் பங்கேற்கிறார்.
இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பிற்பகல் 3.30 மணிக்கு அவர் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.
குடியரசுத் தலைவர் வருகையைத் தொடர்ந்து சென்னை நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது.












Click it and Unblock the Notifications