ராமர் குறித்த பேச்சு: கருணாநிதிக்கு கோர்ட் சம்மன்!
Subscribe to Oneindia Tamil
மும்பை: ராமர் குறித்து தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு முதல்வர் கருணாநிதிக்கு மும்பை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
விஸ்வ இந்து பரிஷத் சார்பில் மும்பை, பொரிவலி பெருநகர நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ராமர் குறித்து அவதூறான கருத்துக்களை முதல்வர் கருணாநிதி பேசியுள்ளார். இதுதொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தது.
இந்த மனுவை விசரித்த நீதிமன்றம், டிசம்பர் 11ம் தேதிக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என முதல்வர் கருணாநிதிக்கு உத்தரவிட்டு சம்மன் அனுப்ப உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications