துணி வாங்க சென்ற மணமகன் மாயம்-திருமணம் நின்றது!
திருச்சி: திருச்சி அருகே திருமணத்திற்குத் தேவையான துணிகளை வாங்கச் சென்ற மாப்பிள்ளை திரும்பி வராததால் கல்யாணம் நின்று போனது.
திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த கே.பேட்டையைச் சேர்ந்தவர் ரத்தினம். இவரது மகன் ஜீவன் சகாயராஜ். அதே பகுதியில் டிவி மெக்கானிக்காக உள்ளார்.
இவருக்கும், மணச்சநல்லூரை அடுத்த நரிமேடு கிராமத்தை சேர்ந்த பிலவேந்திரன் என்பவரது மகள் மரியசெல்விக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
அதன்படி திருமண அழைப்பிதழ் அடித்து உறவினர்களுக்கு கொடுத்தனர். திருமண மண்டபத்திற்கும் அட்வான்ஸ் கொடுத்தனர். திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வந்தன.
இந்நிலையில் சகாயராஜ் திருமணத்திற்கான துணிகள் வாங்க திருச்சிக்கு கடந்த 2 ம் தேதி சென்றார். ஆனால் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர்கள், உறவினர்கள் சகாயராஜை தேடினர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து சாகாயராஜ் பெற்றோர்கள் லால்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் எஸ். ஐ. சந்திரசேகர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மாப்பிள்ளை மாயமாகி விட்டதால் கல்யாணம் நின்று ேபாய் விட்டது.