ஜாதிக் கலவரங்களைத் தடுக்கக் கோரி ஆளுநரிடம் மனு
மதுரை: தென் மாவட்டங்களில் ஜாதி கலவரத்தை தடுக்க கோரி தமிழக ஆளுநரிடம் மனு கொடுக்க தமிழக மக்கள் கழகம் முடிவு செய்துள்ளதாக அக் கட்சியின் தலைவர் முனுசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக மக்கள் கழக மாநில தலைவர் முனுசாமி மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், நூற்றுக்கணக்கான சமூகத் தலைவர்கள் இருக்கும் போது ஒரு சமுதயத்திற்கு மட்டும் அரசு விழா, மணி மண்டபம், விமான நிலையத்திற்கு பெயர் வைப்பது, கல்லூரிக்கு பெயர் வைப்பது கியவை கண்டிக்கதக்கது.
போக்குவரத்து கழகங்களுக்கு இருந்த ஜாதி பெயரை எடுத்து விட்டு தற்போது விமான நிலையத்திற்கு ஜாதி தலைவர் பெயரை வைப்பது வியப்பாக உள்ளது.
தென் மாவட்டங்களில் ஜாதி கலவரம் ஏற்பட திமுக தான் முழு பொறுப்பு. தென் மாவட்டங்களில் அடிக்கடி ஜாதி கலவரம் ஏற்பட்டுக் கொண்டு உள்ளது.
இதை உடனே தடுக்க வேண்டும் என கோரி தமிழக ஆளுநரிடம் மனு கொடுக்க எங்கள் கட்சி மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்துள்ளோம். அதன்படி விரைவில் ஆளுநரை சந்தித்து மனு கொடுக்க உள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications