தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் தீ - கம்ப்யூட்டர்கள் நாசம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் நேற்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் மதிப்புள்ள கம்ப்யூட்டர்கள், ஆவணங்கள், முக்கியப் பொருட்கள் சேதமடைந்தன.
சென்னை சென்டிரல் ரயில் நிலையம் அருகே தெற்கு ரயில்வேயின் தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் உள்ள சென்னை கோட்ட அலுவலக கட்டடத்தின் 7வது மாடியில், திட்டப் பிரிவு அலுவலகம் உள்ளது.
இங்கு நேற்று இரவு திடீரென தீப்பிடித்தது. உடனடியாக தீயணைப்புப் படையினருக்குத் தகவல் தரப்பட்டது. தீயணைப்பு வீரர்ள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த தீவிபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கம்ப்யூட்டர்கள், மேசைகள், அலமாரிகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் ஆகியவை சேதமடைந்து விட்டதாக கூறப்பட்டுள்ளது.
தீவிபத்துக்கு மின்கசிவே காரணம் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications