For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாட்சி சொல்ல வராத இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்ட்

By Staff
Google Oneindia Tamil News


மதுரை: கொலை வழக்கு ஒன்றில் சாட்சி சொல்ல வராத மதுரையைச் சேர்ந்த இன்ஸ்பெக்டருக்கு சிவகங்கை நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் பிரான்மலையைச் சேர்ந்தவர் முத்தையா. இவரது மனைவி ஞானம்மாள். இவர்கள் இருவரையும் கடந்த 2002ம் ஆண்டு நகையை கொள்ளையடிக்க வந்த இருவர் கொலை செய்து விட்டனர்.

இந்த வழக்கு சிவகங்கை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார். எனவே வழக்கு விசாரணையின் போது அவரை சாட்சி சொல்ல வருவதற்காக நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

இந்த கொலை வழக்கு சிவகங்கை மாவட்ட நீதிபதி நஷீர் அகமது முன்னிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சாட்சி சொல்ல வராத இன்ஸ்பெக்டர் ரவீந்திரனுக்கு நீதிபதி பிடிவாரண்ட பிறப்பித்து உத்தரவிட்டார்.

ரவீந்திரன் தற்போது மதுரையில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X