For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடி அரசை தூக்கி எறிய வேண்டும்- பூரி சங்கராச்சாரியார்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: சிறுபான்மை சமூகத்தினர் மீது துவேசம் கொண்டு நடந்து வரும் நரேந்திர மோடி அரசால், இந்து சமுதாயத்திற்கே கெட்ட பெயர் ஏற்பட்டு விட்டது. இனியும் மோடி அரசு தொடரக் கூடாது. மோடியை பதவியிலிருந்து தூக்கி எறிய மதச்சார்பற்ற சக்திகள் அனைத்தும் ஒன்று சேர வேண்டும் என்று பூரி சங்கராச்சாரியார் அதோக்சானந்த் தேவ தீர்த்த சுவாமிகள் அழைப்பு விடுத்துள்ளதால் பாஜக பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

சொராபுதீன் படுகொலை தொடர்பாக மோடி பேசிய பேச்சால் பாஜகவுக்கு பெரும் சங்கடம் ஏற்பட்டுள்ளது. குஜராத்தில் பாஜகவின் வெற்றியை இது பாதிக்குமோ என்ற பயம் பாஜகவினர் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த நிலையில், பாஜகவுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில், பூரி மடாபதி கிளம்பியுள்ளார். மோடியை பதவியிலிருந்து தூக்கி எறிய அனைத்து மதவாசத சக்திகளும் ஒன்று சேர வேண்டும் என்று பூரி மடாதிபதி அதோக்சானந்த தேவ தீர்த்த சுவாமிகள் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோத்ரா சம்பவத்திற்குப் பின்னர் சிறுபான்மையினரை ஒடுக்கும் முயற்சியில் மோடி தீவிரமாக இறங்கி விட்டார்.

மோடி அரசின் நியாயமற்ற, இரக்கத்தனமர்ற செயல்கள், மத நல்லிணக்கத்தை கேள்விக்குறியாக்கி விட்டது. இந்து சமுதாயத்தினரை பெரும் அவமானத்தில் தள்ளி விட்டுள்ளது.

இந்துக்களின் நலம் விரும்பி, இந்துக்களைக் காக்க அவதரித்தவர் என்று கூறப்பட்ட மோடியால், இந்துக்கள் இன்று தலை குணிந்து நிற்கின்றனர்.

நந்திகிராம் போன்ற விவாகரங்களில் அனைத்துக் கட்சியினரும் ஒருங்கிணைந்து நிற்கின்றனர். ஆனால் அதற்குப் பதிலாக, மோடிக்கு எதிராக அனைவரும் அணி திரள வேண்டும். மதச்சார்பற்ற சக்திகள் அனைத்தும் தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை மறந்து விட்டு கை கோர்க்க வேண்டும். மோடி அரசை தூக்கி எறிய அனைவரும் முன்வர வேண்டும். அவருக்கு எதிராக தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட வேண்டும்.

இந்து அமைப்புகள் மோடி விவகாரத்தில் இரட்டை நிலையை மேற்கொள்ளக் கூடாது. மோடி மீது அவர்களுக்கு அதிருப்தி இருந்தால் அதை வெளிப்படையாக தெரிவித்து அவருக்கு எதிராக செயல்பட முன்வர வேண்டும்.

பல்வேறு தீய செயல்களில் ஈடுபட்டும் கூட மோடி கடந்த ஐந்து ஆண்டுகளாக பதவியில் நீடித்திருப்பது துரதிர்ஷ்டவசமானது. ஆனால் இப்போது குஜராத் மக்களுக்கு சரியான நேரம் வந்துள்ளது. மோடியை விரட்ட இதுதான் சரியான நேரம். அனைவரும் ஒருங்கிணைந்து மோடியை தோற்கடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் பூரி சங்கராச்சாரியார்.

பாஜகவுக்கு தீவிர ஆதரவு தருபவர்களில் ஒருவரான பூரி சங்கராச்சாரியார் மோடிக்கு எதிராக இவ்வளவு கடுமையாக கருத்து தெரிவித்துள்ளதால் பாஜக தரப்பு ஆடிப் போயுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X