பெங்களூரிலிருந்து மேல்மருவத்தூருக்கு சிறப்பு ரயில்கள்
பெங்களூர்: பெங்களூரிலிருந்து, மேல்மருவத்தூருக்கு தென் மேற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்கவுள்ளது.
தமிழகத்தின் மேல்மருவத்தூரில் உள்ள பங்காரு அடிகளாரின் ஆதிபராசக்தி கோவிலுக்கு கர்நாடகத்திலிருந்து பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதனால் பெங்களூரிலிருந்து சிறப்பு ரயில்களை விட தென் மேற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி பெங்களூர் சிட்டி - மேல்மருவத்தூர் சிறப்பு ரயில்கள் டிசம்பர் 15ம் தேதியும், 20ம் தேதியும் இயக்கப்படுகிறது. இந்த ரயில்கள் பெங்களூரில் இரவு 6.45 மணிக்குக் கிளம்பி அடுத்த நாள் காலை 5 மணிக்கு மேல்மருத்தூர் சென்றடையும்.
மறு மார்க்கத்தில் டிசம்பர் 16 மற்றும் 21 ஆகிய தேதிகளில் மேல் மருவத்தூரிலிருந்து பெங்களூருக்கு ரயில்கள் இயக்கப்படும். இந்த ரயில்கள் விழுப்புரத்திலிருந்து 4.30 மணிக்கு கிளண்பி மேல் மருவத்தூரை 5.45 மணிக்கு வந்தடையும். பின்னர் அங்கிருந்து 6 மணிக்குக் கிளம்பி அடுத்த நாள் காலை 4 மணிக்கு பெங்களூரை வந்தடையும்.