திமுக மாநாடு-ராட்சத பலூன் வெடித்து இருவர் காயம்
நெல்லை: நெல்லையில் ராட்சத பலூன் வெடித்து 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
நெல்லையில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி முதல் மாநாட்டை ஒட்டி மாநகரம் முழூவதும் டிஜிட்டல் போர்டுகள், தோரணங்கள், அலங்கார வளைவுகள் கொடிகள் என பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பல்வேறு இடங்களில் உள்ள கட்டிடத்தின் மாடிகளில் முதல்வர் கருணாநிதி மற்றும் அமைச்சர் ஸ்டாலினை வரவேற்று ராட்சத பலூன்கள் பறக்க விடப்பட்டுள்ளன.
வண்ணார்பேட்டை ஓட்டல் ராம் பிரசாத் மாடியில் ஸ்டாலினை வரவேற்று மாலைராஜா எம்.எல்.ஏ ராட்சத பலூன் பறக்க விட்டுள்ளார். இன்று காலை அந்த பலூனுக்கு சென்னை போரூரைச் சேர்ந்த கார்த்திக், பட்டாபிராமைச் சேர்ந்த ரமேஷ் ஆகியோர் காற்று நிரப்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாரவிதமாக பலூன் திடீரென்று வெடித்து சிதறியது. இதில் இருவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.
உடனடியாக அவர்கள் இருவரும் நெல்லையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து பாளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்












Click it and Unblock the Notifications