கருணாநிதி நாளை டெல்லி செல்கிறார்
சென்னை: முதல்வர் கருணாநிதி 4 நாள் பயணமாக நாளை டெல்லி செல்கிறார்.
டெல்லியில் நடைபெறவுள்ள தேசிய வளர்ச்சி கூட்டம் மற்றும் அனைத்து மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நாளை மதியம் 1.40 மணிக்கு ஜெட் ஏர்வேஸ் மூலம் டெல்லி செல்கிறார் கருணாநிதி.
இந்த மாநாட்டில் நக்சல்கள் மற்றும் தீவிரவாதிகளை ஒடுக்குவது குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்படவுள்ளது. இதில் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், பாரா மிலிட்டரிப் படைகளின் தலைவர்கள், உளவுப் பிரிவுகளின் தலைவர்களும் பங்கேற்கின்றனர்.
வரும் 20ம் தேதி பிரதமர் மன்மோகன்சிங் அனைத்து மாநில முதல்வர்களையும் தனித்தனியே சந்தித்து பேசுகிறார். அப்போது பிரதமரையும் கருணாநிதி சந்திக்கிறார். மேலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் சந்திக்கிறார்.
இந்தப் பயணத்தின் போது முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து கேரள முதல்வர் அச்சுதானந்தனையும் கருணாநிதியையும் சந்திக்க வைக்க பிரதமர் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு வரும் 21ம் தேதி கருணாநிதி சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications