திருப்பூர் நகராட்சியின் கடைசிக் கூட்டம் - நெகிழ்ச்சியில் கவுன்சிலர்கள்
திருப்பூர்: மாநகராட்சியாக புதுப் பொலிவு பெறவிருக்கும் திருப்பூர் நகராட்சியின் கடைசிக் கூட்டம் நேற்று நடந்தது. கவுன்சிலர்கள் அனைவரும் நெகிழ்ச்சியுடன் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஈரோடு மற்றும் திருப்பூர் நகராட்சிகளை மாநகராட்சிகளாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஜனவரி 1ம் தேதி முதல் திருப்பூர் மாநகராட்சி ஆகிறது.
இதையடுத்து புதிய மாநகராட்சி எல்லைக்கான வரைபடம் மற்றும் திறந்து வைக்கப்படவுள்ள நினைவுத் தூணுக்கு ஒப்புதல் தருவதற்காக நகராட்சிக் கூட்டம் நேற்று கூட்டப்பட்டிருந்தது.
மேலும் மாநகராட்சியாக நிலை உயர்த்தும் அரசு ஆணையும் உறுப்பினர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.
நகராட்சியாக இதுவே கடைசிக் கூட்டம் என்பதால் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் நெகிழ்ச்சிப் பெருக்குடன் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வழக்கம் போல பல்வேறு கட்சி கவுன்சிலர்களும், தங்களது வார்டுகளில் நிலவும் பிரச்சினைகளை சபையில் எழுப்பினர்.
அத்தனை பிரச்சினைகளுக்கும் மாநகராட்சி ஆன பிறகாவது தீர்வு கிடைக்குமா என்று கவுன்சிலர்கள் ஆதங்கத்துடன் கேட்டனர். கண்டிப்பாக தீர்வு கிடைக்கும் என்று நகராட்சித் தலைவர் செல்வராஜ் நம்பிக்கை ெதரிவித்தார்.
இறுதியில், கடந்த 100 ஆண்டு கால நகராட்சி வாழ்க்கையை முடித்துக் கொண்டு நேற்றைய கடைசிக் கூட்டம் நிறைவு பெற்றது.












Click it and Unblock the Notifications