காவல்துறை சீர்திருத்தம் என்பது கண்துடைப்பு-கிரண்பேடி
டெல்லி: காவல்துறை சீர்திருத்தப்படும் என கூறுவதெல்லாம் வெறும் கண்துடைப்பு என விருப்ப ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி கிரண்பேடி சாடியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
காவல்துறை சீர்திருத்தப்படும் என கூறுவதெல்லாம் வெறும் கண்துடைப்பு. காவல்துறையை சீர்திருத்துவதற்கு அரசிடம் எந்த திட்டமும் கிடையாது. சீர்திருத்த வேண்டும் என்ற எண்ணமும் அவர்களிடம் இல்லை.
இத்தகைய அரசிடம் பணியாற்றுவது கடினம் என்பதை உணர்ந்து பதவி விலகி விட்டேன். எப்படி செயல்பட வேண்டும் என்பதை யாராவது அரசுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். அரசுக்கு வெளியே இருந்து நான் காவல்துறையை சீர்திருத்துவேன்.
தற்போது வி.ஐ.பிக்களுக்கும், தீவிரவாதிகளின் மிரட்டலுக்கும் உள்ளான சக்திமிக்க நபர்களுக்கும் பாதுகாப்பு அளிப்பதற்காகவே போலீஸ் பயன்படுத்தப்படுகிறது.
சாதாரண மக்கள் நன்மைக்காக பணியாற்ற போலீசாருக்கு நேரமில்லை. ஏழைகளுக்கு எந்த பாதுகாப்பும் அளிக்கப்படவில்லை. போலீஸ் என்பது மக்களை பாதுகாக்கும் சக்தி. இதை கண்டு பயப்படாத ஒரு சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்றார் கிரண்பேடி.












Click it and Unblock the Notifications