ராமேஸ்வரத்தில் நாளை விவசாயிகள் பிரமாண்ட ஆர்ப்பாட்டம்
ராமேஸ்வரம்:அரசு வழங்கிய விவசாயக் கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்யக் கோரி ராமேஸ்வரத்தில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர். போராட்டத்தின் இறுதியில் கடன் பத்திரங்களை கடலில் வீசி எறியவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
அகில இந்திய விவசாய சங்கம் இதற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்தப் போராட்டத்தில் தமிழகம், கேரளா, கர்நாடகம், மகாராஷ்டிரா, ஒரிசா, ஹரியானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்கின்றனர்.
மாபெரும் ஆர்ப்பாட்டத்தையும் அதைத் தொடர்ந்து பொதுக்கூட்டத்தையும் நடத்தவுள்ளனர். அதன் பின்னர் தாங்கள் வாங்கிய கடன் தொகைக்கான பத்திரங்களை அவர்கள் அக்னி தீர்த்த கடலில் வீசி எறியவுள்ளனர்.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயக் கடன் வாங்கிய அனைத்து விவசாயிகளுக்கும் அந்தக் கடன் தொகையை ரத்து செய்ய வேண்டும் என்று போராட்டக் குழுவைச் சேர்ந்த கோவிந்த் ஜோஷி படேல் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications