ஹோட்டல் விபத்து: காண்டிராக்டர் சரண்
சென்னை: சென்னை சவேரா ஹோட்டல் நீச்சல் குளத்தில் அமைக்கப்பட்ட புத்தாண்டு கொண்டாட்ட மேடை சரிந்து விழுந்து ஒருவர் பலியான சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த காண்டிராக்டர் நரேந்திர சிங் இன்று நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சவேரா ஹோட்டலில் டிசம்பர் 31ம் தேதி புத்தாண்டுக் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.
அப்போது, நீச்சல்குளத்தின் மீது அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்றபடி நடனமாடிக் கொண்டிருந்தவர்கள், திடீரென மேடை சரிந்து நீச்சல்குளத்தில் விழுந்ததால் தண்ணீரில் விழுந்தனர்.
இந்த சம்பவத்தில் சுமித் அக்னிஹோத்ரி என்ற சாப்ட்வேர் என்ஜீனியர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஹோட்டல் பொது மேலாளர் ஆண்டனி மைக்கேல் மற்றும் மேடை போடும் காண்டிராக்டை எடுத்திருந்த நரேந்திர சிங்கின் மேலாளர் ரவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் நரேந்திர சிங் இன்று சைதாப்பேட்டை 18வது பெருநகர நீதிமன்றத்தில் சரணடைந்தார்












Click it and Unblock the Notifications