For Daily Alerts
Just In
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்
சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு முதல்வர் கருணாநிதி பொங்கல் போனஸை அறிவித்துள்ளார். ஓய்வூதியதாரர்களுக்கும் சிறப்புப் பரிசு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு இன்று (ஜனவரி 5) வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழக அரசின் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 30 நாள் ஊதியம் போனஸாக வழங்கப்படும்.
ஏ மற்றும் பி பிரிவு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு போனஸ் தொகை உயர்த்தப்பட்டு ரூ. 1000 ஆக வழங்கப்படும்.
ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் சிறப்புப் பொங்கல் பரிசு இரட்டிப்பாக்கப்பட்டு ரூ. 300 வழங்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Story first published: Saturday, January 5, 2008, 14:50 [IST]