இலங்கை கடற்படைத் தாக்குதலுக்கு ஜெ. கண்டனம்
சென்னை: ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்தி வருவதற்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீன்வளத்துறையின் முறையான அனுமதி பெற்ற பின்னரே கடலில் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.
தனுஷ்கோடி அருகே இந்திய கடல் எல்லைப் பகுதியில், அவர்கள் மன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இதில் சேகர் என்ற மீனவர் படுகாயமடைந்துள்ளார். அவரது தோள்பட்டையில் குண்டு பாய்ந்துள்ளது.
இத்தகைய திடீர் தாக்குதலில் ஈடுபட்டு மீனவர்களின் வாழ்வாதரத்தையே சிதைக்கும் இலங்கை கடற்படையினரின் செயலை நாம் ஒரு போதும் அனுமதிக்க முடியாது.
இத்தகைய கோழைத்தனமான தாக்குதலுக்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
தொடர்ந்து தமிழக மீனவர்கள் மீது இது போன்ற தாக்குதல்கள் இலங்கை கடற்படையினரால் நடத்தப்பட்டு வருகின்றன. மத்திய அரசும், திமுக அரசும் மீனவர்கள் நலனில் அக்கறை கொண்டு உடனடியாக இது போன்ற சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
-
சென்னை - அரக்கோணம் மின்சார ரயில் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி.. கோடை காலத்தில் இனி நிம்மதியாக போலாம் -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சொத்து வரியின் பயன்கள்.. இது எப்படி கணக்கிடப்படுகிறது? வரி கட்டாவிட்டால் ஜப்தி வருமா? அறியாத தகவல் -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
கோடிக்கணக்கில் சொத்து சேர்த்தாலும் சிக்கல் வராது.. ஆனால் இந்த ஒரு விஷயத்தை மட்டும் மறக்காதீங்க! -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க












Click it and Unblock the Notifications