Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலங்கை கடற்படைத் தாக்குதலுக்கு ஜெ. கண்டனம்

Subscribe to Oneindia Tamil


சென்னை: ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்தி வருவதற்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீன்வளத்துறையின் முறையான அனுமதி பெற்ற பின்னரே கடலில் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.

தனுஷ்கோடி அருகே இந்திய கடல் எல்லைப் பகுதியில், அவர்கள் மன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இதில் சேகர் என்ற மீனவர் படுகாயமடைந்துள்ளார். அவரது தோள்பட்டையில் குண்டு பாய்ந்துள்ளது.

இத்தகைய திடீர் தாக்குதலில் ஈடுபட்டு மீனவர்களின் வாழ்வாதரத்தையே சிதைக்கும் இலங்கை கடற்படையினரின் செயலை நாம் ஒரு போதும் அனுமதிக்க முடியாது.

இத்தகைய கோழைத்தனமான தாக்குதலுக்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

தொடர்ந்து தமிழக மீனவர்கள் மீது இது போன்ற தாக்குதல்கள் இலங்கை கடற்படையினரால் நடத்தப்பட்டு வருகின்றன. மத்திய அரசும், திமுக அரசும் மீனவர்கள் நலனில் அக்கறை கொண்டு உடனடியாக இது போன்ற சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+