உச்ச நீதிமன்ற தீர்ப்பை பொறுத்தே சேது சமுத்திர திட்டம்-காங்.
டெல்லி: உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பொறுத்தே சேது சமுத்திர திட்டத்தை தொடர்ந்து நிறைவேற்றுவது குறித்து முடிவெடுக்கப்படும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
ராமர் பால விவகாரத்தால் சேது சமுத்திரத் திட்டத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இத் திட்டத்தை தொடர்ந்து நிறைவேற்ற திமுக தலைமையிலான தமிழக அரசு முயற்சித்து வரும் நிலையில் காங்கிரஸ் வேறு மாதிரியாக குரல் தர ஆரம்பித்துள்ளது.
இத் திட்டத்துக்கு மதரீதியில் எதிர்ப்பைக் கிளப்பி வட மாநிலங்களில் பாஜக புயல் எழுப்பி வரும் நிலையில், காங்கிரசும் தனது நிலையை மாற்றிக் கொள்ள ஆரம்பித்துள்ளது.
இது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில்,
இத் திட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருப்போம். அதன் தீர்ப்பைப் பொறுத்தே இத் திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications