ஆளுநர் உரையில் புதிய திட்டங்கள் இல்லை-பாமக
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆளுநர் உரையில் புதிய திட்டங்கள் எதுவும் இல்லை என பாமக தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
ஆளுநர் உரையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவது குறித்து தான் அதிகம் உள்ளது. மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப கவர்னர் உரையில் புதிய திட்டங்கள் எதுவும் இல்லை.
மெட்ரோ ரயில் திட்டம் உட்பட சில திட்டங்கள் வரவேற்கக் கூடியதாக உள்ளது. ஆனால் முக்கிய பிரச்சனையான வேளாண்மைத்துறை முன்னேற்றத்துக்கு எதுவுமே அதில் கிடையாது.
அறிவிக்கப்படாத மின்தடையால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு உரிய தீர்வு ஆளுநர் உரையில் இல்லை. மொத்தத்தில் ஆளுநர் உரை ஏமாற்றம் அளிப்பதாகவே உள்ளது என்றார் ஜி.கே.மணி.
இந்த முறை திமுக ஆட்சிக்கு வந்த பின் ஆளுநர் உரையை பாமக குறை கூறுவது இதுவே முதன்முறையாகும்.












Click it and Unblock the Notifications