சேலம், வேலூரில் புதிய விமான நிலையங்கள்

சட்டப் பேரவையில் ஆளுநர் பர்னாலா ஆற்றிய உரையில்,
தற்போது உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஏராளமான தனியார் நிறுவனங்கள் நுழைந்ததுள்ளதாலும், விமான பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாலும் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி ஆகிய விமான நிலையங்கள் விரிவாக்கப்படுவதோடு, நவீனமயமாக்கப்படும்.
சேலம், வேலூர் நகரங்களின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு அப்பகுதி மக்களின் வசதிக்கேற்ப அங்கு புதிதாக விமான நிலையம் அமைக்கப்படும்.
விழுப்புரம்-திண்டுக்கல் இரட்டை ரயில் பாதை:
விழுப்புரம்-திண்டுக்கல் இடையிலான ரயில் பாதையை இரட்டிப்பாக்க மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த மார்க்கத்தில் கூடுதல் ரயில்களை இயக்க முடியும்.
தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீன் தமிழகத்தில் தினக் கூலி ரூ. 80 தரப்படுகிறது. இது எந்த மாநிலத்திலும் இல்லாத கூலியாகும். இந்த திட்டத்தின் பயன் பெறுபவர்களில் 82 சதவீதம் பேர் பெண்கள் ஆவர் என்றார்.












Click it and Unblock the Notifications