கெட்டுப் போன ஸ்னாக்ஸ் சாப்பிட்ட 25 மாணவர்கள் மயக்கம்
திருச்சி: திருச்சியில் நடந்து வரும் தென்னிந்திய அறிவியல் கண்காட்சியில் கலந்து கொண்ட 25 புதுச்சேரி பள்ளி மாணவ, மாணவியர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் சாப்பிட்ட ஸ்னாக்ஸ் கெட்டுப் போனதால்தான் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.
திருச்சியில் தென்னிந்திய அறிவியல் கண்காட்சி நடந்து வருகிறது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த ஏராளமான பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டுள்ளனர்.
இன்று புதுச்சேரியைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர் 25 பேர் அங்குள்ள கேன்டீனில் ஸ்னாக்ஸ் வாங்கி சாப்பிட்டுள்ளனர்.
சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே அவர்கள் மயங்கி விழுந்தனர். இதையடுத்து உடனடியாக சிஎஸ்ஐ மருத்துவமனைக்கு அவர்கள் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டனர்.
சிகிச்சைக்குப் பின்னர் அவர்கள் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கண்காட்சி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த அனைத்து கேன்டீன்களையும் மூட மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications