ஜம்மு - காஷ்மீரில் பந்த் - இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஸ்ரீநகர்: தீவிரவாதிகள் மற்றும் பல்வேறு பிரிவினை வாத அமைப்புகள் விடுத்த பொது வேலைநிறுத்த அழைப்பால் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தினமான இன்று பொது வேலைநிறுத்தத்திற்கு பல்வேறு பிரிவினைவாத அமைப்புகள், தீவிரவாத அமைப்புகள், ஹூரியத் மாநாட்டுக் கட்சிகளின் இரு பிரிவுகள் ஆகியவை அழைப்பு விடுத்திருந்தன.
அதன்படி இன்று அங்கு பந்த் நடந்து வருகிறது. காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதி முழுவதும் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான மாவட்டங்களில் போக்குவரத்தும் கூட பாதிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தின விழா விடுமுறை என்பதால் அரசு நிறுவனங்கள், அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.
தீவிரவாதிகள் தாக்கக் கூடும் என்ற அச்சத்தால், மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர்.
பாரமுல்லா, அனந்த்நாக், பத்காம் ஆகிய மாவட்டங்ளில் பந்த் முழு அளவில் உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.












Click it and Unblock the Notifications