சத்துணவு சாப்பிட்ட 20 குழந்தைகள் மயக்கம்
Subscribe to Oneindia Tamil
கரூர்: கரூர் அருகே சத்துணவு சாப்பிட்ட 5 வயதுக்குட்பட்ட 20 குழந்தைகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கரூர் மாவட்டம், வீரராக்கியம் கிராமம் அருகே உள்ள சத்துணவுக் கூடத்தில் நேற்று மதியம் 5 வயதுக்குட்பட்ட 20 குழந்தைகள் சத்துணவு சாப்பிட்டனர்.
இவர்கள் மதிய உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் வரிசையாக வாந்தி எடுக்க துவங்கினர். உடனே அனைவரும் புளியூர் மற்றும் கரூரில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்களில் 18 குழந்தைகள் டிஸ்சார்ஜ் செய்ய்ப்பட்டனர். 2 குழந்தைகள் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கெட்டுப்போன உணவை சாப்பிட்டதால் செரிக்காமல் அனைவரும் வாந்தி எடுத்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications