For Daily Alerts
Just In
சட்டசபை காங். தலைவர் சுதர்சனம் மருத்துவமனையில் அனுமதி
சென்னை: தமிழக சட்டசபை காங்கிரஸ் தலைவர் டி.சுதர்சனம் திடீர் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று காலை சுதர்சனத்திற்கு திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவரது உதவியாளர்கள் மற்றும் வீட்டில் இருந்தவர்கள் அமைந்தகரையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
தகவல் அறிந்ததும் அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, காங்கிரஸ் நிர்வாகிகள் விரைந்து சென்று உடல் நலம் விசாரித்தனர்.
சுதர்சனத்தின் உடல் நிலை தற்போது தேறி வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
Story first published: Saturday, January 26, 2008, 12:50 [IST]