புலிகள் ஏவுகணை தாக்குதல்-மயிரிழையில் தப்பினார் கோதபயா ராஜபக்சே!

இதில் நூலிழையில் அவர்கள் உயிர் தப்பினர். புலிகளின் அதிரடித் தாக்குதலில் பலாலி ராணுவ தளம் பலத்த சேதமடைந்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையிலான சண்டை தீவிரமடைந்து வருகிறது. இரு தரப்பும் கடும் சண்டையில் ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில் நேற்று பலாலி பகுதியில் பெரும் தாக்குதலில் விடுதலைப்புலிகள் இறங்கினர். நேற்று மாலை, கோத்தபயா ராஜபக்சே, ராணுவ தளபதி பொன்சேகரா உள்ளிட்டோர் பலாலி ராணுவதளத்திற்கு விமானம் மூலம் வந்தனர்.
அவர்கள் விமான தளத்ைத நெருங்கியபோது திடீரென விடுதலைப் புலிகள் சரமாரியாக ஏவுகணைத் தாக்குதலில் இறங்கினர். இதனால் விமானம் தரையிறங்க முடியாமல் தவித்தது. மேலும், ஏவுகணைத் தாக்குதலில் சிக்கிக் கொள்ளாமல் தப்பிக்க விமானி கடுமையாக முயன்று மேல் நோக்கி விமானத்தை செலுத்தி கோத்தபயா உள்ளிட்டோரைக் காத்தார்.
அதன் பின்னர் விமானம் மீண்டும் கொழும்புக்கே திரும்பிச் சென்றது. இதையடுத்து பலாலி தளம் மீது விடுதலைப் புலிகள் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலால் விமான தளம் பெரும் சேதத்தை சந்தித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஓரிரு விமானங்களும் கூட இதில் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலைத் தொடர்ந்து பலாலி ராணுவ தள விமான நிலையம் மூடப்பட்டு விட்டது. மேலும் வேறு சில விமான தளங்களிலும் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் புதிய தாக்குதலைத் தொடர்ந்து இலங்கையில் பெரும் பதட்டமும், பரபரப்பும் அதிகரித்துள்ளன.












Click it and Unblock the Notifications