மாணவர் தற்கொலை: கல்லூரியை அடித்து நொறுக்கிய மாணவர்கள்
சென்னை: பிட் அடித்ததுப் பிடிபட்ட தனியார் என்ஜீனியரிங் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அந்தக் கல்லூரியை மாணவர்கள் சூறையாடினர்.
சென்னையை அடுத்துள்ள படப்பை வஞ்சுவான்சேரியில் தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது. இங்கு விக்னேஷ்(23) என்ற மாணவர் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் பிரிவில் இறுதி ஆண்டு படித்து வந்தார்.
2007 டிசம்பரில் நடந்த செமஸ்டர் தேர்வில் விக்னேஷ் பிட் அடித்ததாக ஆசிரியர்கள் அவரை கையும் களவுமாக பிடித்து, அவரிடம் எழுதி வாங்கிக் கொண்டு தேர்வு அறையை விட்டு வெளியே அனுப்பினர். இதனால் அவர் தொடர்ந்து தேர்வு எழுத முடியாமல் போனது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் வெளியான தேர்வு முடிவில் விக்னேஷ் பெயில் ஆனார். மேலும் கல்லூரிக்கு வந்த விக்னேசை பேராசிரியர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை.
இதையடுத்து வீடு திரும்பிய விக்னேஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து குரோம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் பேராசிரியர்களின் மிரட்டலால் தான் தான் விக்னேஷ் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி மாணவர்கள் நேற்று கல்லூரி வளாகத்தை அடித்து நொறுக்கி சூறையாடினர்.
இதைக் கண்ட கல்லூரி நிர்வாகிகள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தடியடி நடத்தி விரட்டினர். இதைத் தொடர்ந்து கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது.
இன்று காலை கல்லூரிக்கு வந்த மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். பின்னர் போலீசார் தலையிட்டு சமரசம் செய்த பின்னர் மாணவர்கள் அனைவரும் வகுப்புகளுக்குச் சென்றனர்.
தொடர்ந்து அசம்பாவித சம்பவம் நடக்காமல் தடுக்க கல்லூரி வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
கோயம்பேட்டில் மூட்டை மூட்டையாக தேங்கி கிடக்கும் காய்கறிகள்.. வியாபாரிகள் கனவிலும் நினைக்காத மாற்றம் -
கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையத்திற்கு.. 'கலைஞர்' பெயர்! தமிழ்நாடு அரசு ஒப்புதல் -
Gold Rate Today: ஒரே அடியாக சரிந்த தங்கம் விலை.. ரூ.1,120 குறைந்தது! சென்னையில் ஒரு கிராம் எவ்வளவு? -
அதிமுக கோட்டையில் 'தென்னந்தோப்பு'! சசிகலாவின் மாஸ்டர் பிளான்! இரட்டை இலைக்கு செக் வைக்கும் 'பச்சை'! -
Heavy Rain: அடுத்த ஒரு மணி நேரம் விடாமல் கொட்டப்போகுது மழை.. குமரி, நெல்லைக்கு பறக்கும் அலர்ட்! -
சென்னையில் 100 டிகிரியை தொடும் வெயில்! வார்னிங் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
“பாட்டிலுக்கு 10 ரூபாய்”: பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை அமல்படுத்தாவிட்டால்- ஐகோர்ட் வார்னிங் -
பரங்கிமலை இன்று முதல் சென்னையின் ‘ஹாட்ஸ்பாட்’.. கடற்கரை - பரங்கிமலை பறக்கும் ரயில் அட்டவணை வெளியீடு! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது












Click it and Unblock the Notifications