மாணவர் தற்கொலை: கல்லூரியை அடித்து நொறுக்கிய மாணவர்கள்
சென்னை: பிட் அடித்ததுப் பிடிபட்ட தனியார் என்ஜீனியரிங் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அந்தக் கல்லூரியை மாணவர்கள் சூறையாடினர்.
சென்னையை அடுத்துள்ள படப்பை வஞ்சுவான்சேரியில் தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது. இங்கு விக்னேஷ்(23) என்ற மாணவர் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் பிரிவில் இறுதி ஆண்டு படித்து வந்தார்.
2007 டிசம்பரில் நடந்த செமஸ்டர் தேர்வில் விக்னேஷ் பிட் அடித்ததாக ஆசிரியர்கள் அவரை கையும் களவுமாக பிடித்து, அவரிடம் எழுதி வாங்கிக் கொண்டு தேர்வு அறையை விட்டு வெளியே அனுப்பினர். இதனால் அவர் தொடர்ந்து தேர்வு எழுத முடியாமல் போனது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் வெளியான தேர்வு முடிவில் விக்னேஷ் பெயில் ஆனார். மேலும் கல்லூரிக்கு வந்த விக்னேசை பேராசிரியர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை.
இதையடுத்து வீடு திரும்பிய விக்னேஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து குரோம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் பேராசிரியர்களின் மிரட்டலால் தான் தான் விக்னேஷ் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி மாணவர்கள் நேற்று கல்லூரி வளாகத்தை அடித்து நொறுக்கி சூறையாடினர்.
இதைக் கண்ட கல்லூரி நிர்வாகிகள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தடியடி நடத்தி விரட்டினர். இதைத் தொடர்ந்து கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது.
இன்று காலை கல்லூரிக்கு வந்த மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். பின்னர் போலீசார் தலையிட்டு சமரசம் செய்த பின்னர் மாணவர்கள் அனைவரும் வகுப்புகளுக்குச் சென்றனர்.
தொடர்ந்து அசம்பாவித சம்பவம் நடக்காமல் தடுக்க கல்லூரி வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
சென்னை உட்பட.. 30 மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
சென்னையின் மிக முக்கிய இடத்தை.. அப்படியே செதுக்க போறாங்க.. களமிறக்கப்பட்ட இரும்பு ராட்சசன்! -
சட்டசபை தேர்தல் களத்தில் உதயநிதியின் தளபதி.. எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் அண்ணா நகர் தொகுதி! -
நேரில் வாங்க அண்ணாமலை.. பாஜக மேலிடம் போட்ட திடீர் உத்தரவு.. சென்னையில் மோடியுடன் முக்கிய மீட்டிங் -
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டிரான்ஸ்பரான சந்தீப் ராய் ரத்தோர் டிஜிபியானது எப்படி? இரவில் நடந்தது என்ன? -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
தென் மாவட்ட பயணிகளுக்கு ஷாக் கொடுத்த ரயில்வே! எழும்பூரில் இருந்து இந்த ரயில்கள் புறப்படாது -
Personality Test: படத்துல 3 ரூம் இருக்கு! எந்த அறை பிடிச்சிருக்குனு சொல்லுங்கள்! சர்பிரைஸ்! -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
ரூ.45 லட்சம் நூதன மோசடி.. சென்னை தம்பதி மீது வழக்கு பதிவு! -
சென்னைவாசிகளுக்கு மிக பெரிய நிம்மதி.. சீரானது புறநகர் ரயில் சேவை.. வழக்கமான அட்டவணையில் இயக்கம்! -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்!












Click it and Unblock the Notifications