மேற்கு வங்கம்-13 மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல்: 27 லட்சம் கோழிகள் அழிப்பு

Subscribe to Oneindia Tamil


கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 13 மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளதை அடுத்து அம் மாநிலத்தில் இதுவரை 27 லட்சம் கோழிகள் கொல்லப்பட்டுள்ளன.

மேற்குவங்கத்தில் பறவைக் காய்ச்சல் மாநிலம் முழுவதும் பரவி வருகிறது. அம்மாநிலத்தின், நடியா மாவட்டங்களில் ஆரம்பித்த H5N1 என்ற வைரஸ் தாக்குதலால் அங்குள்ள கோழிப்பண்ணைகளில் ஆயிரக்கணக்கான கோழிகள் இறந்தன.

இதையடுத்து வேகமாக பிற மாவட்டங்களுக்கும் இந்த நோய் பரவியது. இதைத் தொடர்ந்து கோழிகளை அந்த மாநில அரசு கொன்று வருகிறது. கடந்த இரு வாரங்களில் இதுவரை 27 லட்சம் கோழிகள் கொல்லப்பட்டுள்ளன.

இந்தப் பணிகளில் மேற்கு வங்க அதிகாரிகளுக்கு உதவ தமிழகத்தில் இருந்தும் ஒரு டீம் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து கோழிகள் கொல்லப்பட்டு வருகின்றன.

அதே நேரத்தில் பறவைக் காய்ச்சல் மனிதர்கள் யாருக்கும் இதுவரை பரவவில்லை என அம் மாநில அரசு கூறுகிறது. பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக பீதியடைந்த 3,500 பேரின் ரத்தங்கள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதில் அவர்களுக்கு பறவைக் காய்ச்சல் இல்லை என்பது தெரியவந்துள்ளதாம்.

மேற்கு வங்கத்தில் உள்ள 19 மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் தற்போது 13 மாவட்டங்களில் பரவிவிட்டது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+