கடையநல்லூரில் தொடரும் வாந்தி-பேதி
கடையநல்லூர்: கடையநல்லூர் பகுதியில் தொடர் வாந்தி பேதியால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாந்தி, பேதி பரவி வருகிறது. பாவூர்சத்திரம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வாந்தி-பேதியால் இருவர் இறந்துள்ளனர்.
இந்நிலையில் கடையநல்லூர் யூனியனுக்கு உட்பட்ட 23 பஞ்சாயத்துக்களில் வாந்தி-பேதியால் அதிக மக்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக கடையநல்லூர் பகுதியில் உள்ள புலவனூர், புலவன்பட்டி, பிள்ளைகுளம், ராஜாங்கபுரம் கடையம் உள்ளிட்ட பல பகுதிகளில் வாந்தி, பேதி பரவி உள்ளது. இதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிகிச்சை பலனளிக்காமல் மீனாட்சிபுரம், ராஜாங்கபுரத்தை சேர்ந்த இருவர் பலியாகிவிட்டனர்.
மேலும் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதுகுறித்து சுகாதார துறையினர் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து அப்பகுதியில் வாந்தி பேதி இருப்பதால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.
நெல்லை மாவட்ட கிராமப் பகுதிகளில் தொடரும் வாந்தி, பேதி குறித்து விரைந்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications