வெடிகுண்டுகளுடன் கைதான வாலிபர் குண்டர் சட்டத்தில் அடைப்பு
செங்கோட்டை: செங்கோட்டை அருகே நாட்டு வெடிகுண்டுகளுடன் கைது செய்யப்பட்ட வாலிபரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வட்ட கலெக்டர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார்.
இன்ஸ்பெக்டர்ஜெயசுப்பிரமணியன் தலைமையில் புளியரை சப்-இன்ஸ்பெக்டர் முகமது அனீபா, ஏட்டுகள் மவூது கனி, மணி ஆகியோர் செங்கோட்டை அருகே உள்ள இரவியதர்மபுரம், பூலாங்குடியிருப்பு பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது பூலாங்குடியிருப்பு விலக்கில் கையில் பையுடன் சந்தேகப்படும்படி நின்றிருந்த வாலிபரிடம் போலீசார் சென்றனர். ஆனால், போலீஸ் ஜீப்பை பார்த்தவுடன் அந்த வாலிபர் ஓட்டம் பிடித்தார்.
இதையடுத்து போலீசார் அவரை விரட்டி பிடித்து அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது அதில் 7 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தன.
அவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தியபோது அவர் செங்கோட்டை அருகேயுள்ள கதிரவன் காலனியை சேர்ந்த பண்டாரம் என்ற மூக்காண்டியின் மகன் செல்லச்சாமி என்பது தெரியவந்தது.
செல்லச்சாமி மீது வேறு காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நெல்லை சரக டிஐஜி கண்ணப்பன், துணை சூப்பிரண்டு ஸ்ரீதர், தென்காசி சூப்பிரண்டு மயில்வாகணன் ஆகியோர் செல்லசாமியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டரிடம் பரிந்துரை செய்தனர்.
இதை ஏற்ற கலெக்டர் பிரகாஷ், செல்லச்சாமியை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். இதையடத்து அவர் பாளைங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
ெசல்லச்சாமியிடம் கைப்பற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டுகளை குற்றப்பிரிவு எம்.கீரிடராஜன் செயல் இழக்கச் செய்தார். இவர் ஒரு பாம் எக்ஸ்பர்ட் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications