கேட்பாரின்றி கிடக்கும் இந்தியர் உடல் விரைவில் எரியூட்டல்
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் கிட்டத்தட்ட 2 மாதங்களாக கேட்பாரறின்றிக் கிடக்கும் இந்தியரின் உடல் எரியூட்டப்படவுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்தவர் டாக்டக் ரசம்ஷெட்டி வெங்கட் ராவ். எமிரேட்ஸில் எலெக்ட்ரானிக் அவுட்டோர் விளம்பரங்களை அறிமுகப்படுத்தியதே இவர் தான் என்கிறார்கள். இவர் இறந்து 2 மாதங்களாகும் நிலையில் அவரது உடல் துபாய் மருத்துவமனையில் சவக் கிடங்கிலேயே வைக்கப்பட்டிருந்தது.
ஆனால், இவரது உடலைப் பெற யாரும் முன் வரவில்லை. இந் நிலையில் துபாயைச் சேர்ந்த வேலி ஆப் லவ் என்ற அமைப்பு பெரும்பாடுபட்டு ராவின் உறவினர் ஒருவரை தொடர்பு கொண்டது.
இதையடுத்து அவர் உடலை எரியூட்ட ஒப்புக் ெகாண்டார். இதையடுத்து இந்து முறைப்படி அவரது உடல் எரியூட்டப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications