சவூதி விபத்து: 12 வங்கதேசத்தவர், 3 பாகிஸ்தானியர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
தமாம்: சவூதி அரேபியாவில் நடந்த கோர சாலை விபத்தில் 12 வங்கதேச தொழிலாளர்கள், 3 பாகிஸ்தானியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அனைவரும் கட்டுமானத் தொழிலாளர்கள் ஆவர்.
தமாம் நகரில் உள்ள அகுக் என்ற இடத்தில் இந்த விபத்து நடந்தது. கட்டுமான வேலையை முடித்து விட்டு தொழிலாளர்ளுடன் ஒரு பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த பிக்கப் வேனுடன் பேருந்து பயங்கரமாக மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே 15 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 14 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 3 பேர் பிக்கப் வேனில் பயணித்தவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.
காயமடைந்த 14 பேரும் வங்கதேசத்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. விபத்தில் கொல்லப்பட்டவர்களின் உடல்களை வங்கதேசத்திற்கு அனுப்பும் பணிகள் நடந்து வருகின்றன.












Click it and Unblock the Notifications