டெல்லியில் கடும் பனிமூட்டம் - விமான போக்குவரத்து பாதிப்பு
டெல்லி: டெல்லியில் இன்று காலையில் நிலவிய கடும் பனிமூட்டத்தால் 50க்கும் மேற்பட்ட விமானங்கள் மிகவும் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.
டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் ஜனவரி முதல் பனி அதிகம் உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நேற்றிரவு மழை பெய்தது. இன்று காலை 8-30 மணி நிலவரப்படி 2.7 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. மேலும் அதிகளவு பனிமூட்டம் ஏற்பட்டுள்ளதால் ரோடுகளில் எதிரில் ஆட்கள் நடந்து வருவதே தெரியாத நிலை ஏற்பட்டது.
கடும் பனிமூட்டத்தால் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. காலையில் டெல்லியில் தரையிறங்க வேண்டிய 50க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக வந்தன. அதேபோல டெல்லியிலிருந்து கிளம்ப வேண்டிய விமானங்களும் தாமதமாக கிளம்பின.
தற்போது டெல்லியில் வெப்பநிலை 8.8 டிகிரியாக உள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு டெல்லியில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications