எஸ்டிடி 25 பைசா, லோக்கல் கால் 10 பைசா: சரியப் போகும் செல்போன் கட்டணங்கள்

இப்போதுள்ள கட்டணத்தில் 10ல் ஒரு பங்கு மட்டுமே புதிய கட்டணம் இருக்குமாம். இந்தக் கட்டணக் குறைப்பு அடுத்த 2 ஆண்டுகளில் அமலுக்கு வரும்.
உலகிலேயே செல்போன் கட்டணம் மிகக் குறைவாக இருப்பது இந்தியாவில் தான். இந் நிலையில் கட்டணங்களை மேலும் பெருமளவு குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இப்போது லோக்கல் காலுக்கு ஒரு நிமிடத்துக்கு ரூ.1ம், எஸ்டிடிக்கு ரூ. 2.40ம் வசூலித்து வருகின்றன செல்ேபான் நிறுவனங்கள். இதை லோக்கல் காலுக்கு 10 பைசாவாகவும் எஸ்டிடி அழைப்புக்கு 25 பைசாவாகவும் குறைக்கும் வகையில் புதிய கொள்கை திட்டத்தை மத்திய அரசு அறிவிக்கவுள்ளது.
இது தொடர்பான தகவல்தொடர்புத்துறை அமைச்சர் ராசாவின் முடிவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் முழு ஆதரவு தெரிவித்துள்ளார். கட்டணங்களை குறைக்கும் வகையில் செல்போன் நிறுவனங்களுக்கு ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்படவுள்ளன.
இந்த நிறுவனங்களுக்குத் தேவையான அளவு ஸ்பெக்ட்ரங்கள் (அலைவரிசைகள்) வழங்கவும், 3 ஜி அலைவரிசைகளை ஏலத்தில் விடவும், புதிய நிறுவனங்களை இந்தத் துறையில் அதிக அளவில் நுழையவிட்டு போட்டியை கடும் ஏற்படுத்தவும், தொலைத் தொடர்பு கட்டமைப்பை நிறுவனங்கள் பங்கிட்டுக் கொள்ளவும் வகை செய்ய ஏற்ற வகையில் தொலைத் தொடர்புத்துறையின் விதிகளில் மாற்றங்கள் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் கட்டணங்களை இப்போது இருப்பதை விட 10ல் ஒரு பங்குக்கு குறைக்க முடியும் என தொலைத் தொடர்புத்துறை கருதுகிறது.












Click it and Unblock the Notifications