ராஜபாளையத்தில் நள்ளிரவில் போலீசாருக்கு அடி, உதை

Subscribe to Oneindia Tamil

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு போலீசாரை போதையில் இருந்த ஒரு கும்பல் காட்டு மிராண்டித்தனமாகத் தாக்கியதில் அவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீசார் சாந்தரூபன், பாலமுருகன் ஆகியோர் நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருவள்ளுவர் நகர் டாஸ்மாக் கடை அருகே இரண்டு கோஷ்டியினர் மது அருந்திவிட்டு சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் கலைந்து போக சொல்லியுள்ளனர்.

ஆத்திரம் அடைந்த அந்த இரு கோஷ்டியினரும் ஒன்று சேர்ந்து, போலீசார் இருவரையும் உருட்டுக்கட்டை, இரும்பு கம்பி போன்றவற்றால் சரமாரியாக தாக்கினர்.

இதில் சாந்தரூபன் மண்டை உடைந்தது. பாலமுருகனுக்கு படுகாயம் ஏற்பட்டது. போலீசார் தாக்கப்படுவதை பார்த்த சிலர் வடக்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்ததும் விரைந்து வந்த டி.எஸ்.பி.முருகேசன், இன்ஸ்பெக்டர் ராமசுப்பு மற்றும் போலீசார் அந்த இரு போலீசாரையும் அந்த கும்பலிடமிருந்து காப்பாற்றி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

போலீசாரை பாக்கியராஜ், நாகராஜ், இருளாண்டி, ஜெயக்குமார் உள்பட சுமார் 10 பேரை கைது செய்தனர். மேலும் 10 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+