தென்காசி கிளப்பில் சூதாட்டம்-2 பஞ்சாயத்து தலைவர்கள் கைது
தென்காசி: தென்காசி கிளப் ஓன்றில் சூதாட்டம் ஆடிய பஞ்சாயத்துத் தலைவர்கள் உள்பட 41 பேரை போலீசார் கைது செய்தனர்.
டிஎஸ்பி மயில்வாகணன் தலைமையிலான போலீசார் யானைபாலம் அருகே உள்ள ஒரு கிளப்பில் சோதனை நடத்தி அங்கு சூதாடிய 41 பேரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து ரூ.28,000ம், 17 செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் கிளப் உரிமையாளரான குற்றாலத்தை சேர்ந்த பிரவீன்குமாரை தேடி வருகிறார்கள்.
கைதானவர்களில் கடையம் ஓன்றிய வெங்கடம்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் கணேசன், தென்காசி ஒன்றியம் காசிமேஜர்புரம் பஞ்சாயத்துத் தலைவர் தங்கையா, தென்காசி மின்வாரிய ஆய்வாளர் சேகர், தென்காசி உதவி தோட்டக்கலை அலுவலர் முத்தையா தனராஜ், ஒய்வு பெற்ற ஆசிரியர் ஆகியோரும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட அனைவரும் நேற்றிரவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications