காவலருடன் காதல்-விஷம் குடித்த பெண் போலீஸ்
நாகர்கோவில்: காதலனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்ததால் பெண் போலீஸ் ஒருவர் விஷம் குடித்தார்.
நாகர்கோவில் கோட்டாரை சேர்ந்தவர் பிரியா (25). இவர் மாவட்ட ஆயுதப்படையில் போலீசாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் அங்கு பயிற்சி பெற்ற போலீஸ் பிரகாஷ்க்கும் இடையே காதல் மலர்ந்தது.
இந் நிலையில் பிரகாஷ் நெல்லை மாவட்டம் சிவந்திபட்டிக்கு மாற்றலானார். அங்கு பிரகாஷ்க்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இதையறிந்த பெண் போலீஸ் பிரியா மனமுடைந்தார். பாளை பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள ஒரு கடையில் குளிர்பானம் வாங்கி அதில் விஷம் கலந்து குடித்தார்.
பின்பு தனது காதலன் பிரகாஷை மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்டு தான் விஷம் அருந்திய தகவலைக் கூறினார்.
அதிர்ச்சியடைந்த பிரகாஷ் அங்கு ஓடி வந்து உயிருக்கு போராடிய பிரியாவை நெல்லை மருத்துவ கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு பிரியாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications