தனி நாடானது கொசாவோ!: செர்பியாவிடமிருந்து பிரிவதாக அறிவிப்பு

யூகோஸ்லேவியாவுடன் இணைந்திருந்த பிராந்தியம்தான் கொசாவோ. யூகோஸ்லேவியா உடைந்தபோது செர்பியா, கொசாவோவை தன்னுடன் இணைத்துக் கொண்டது.
கொசாவோவில் பெரும்பான்மையினராக இருப்பவர்கள் அல்பேனிய வம்சவாளியினர். செர்பியர்கள், ரஷ்ய வம்சவாளியினர் என்பது குறிப்பிடத்தக்கது.
அல்பேனிய வம்சாவளியினர் தனி நாடாகப் பிரிய வேண்டிய நடத்திய போராட்டத்ைத அப்போதைய செர்பிய அதிபர் ஸ்லோபாதன் மிலசோவிக் இரும்புக் கரம் கொண்டு அடக்கினார். இதில் ஆயிரக்ணக்கானோர் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் நேட்டோ படைகள் 1999ம் ஆண்டு செர்பிய தலைநகர் பெல்கிரேட் மீது தாக்குதல் நடத்தியது. மிலசோவிக் சிறை பிடிக்கப்பட்டார். இதையடுத்து கொசாவோ ஐ.நா. கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில் செர்பியாவிடமிருந்து பிரிந்து தனி நாடாக தன்னை பிரகடனம் செய்துள்ளது கொசாவோ.
இதுதொடர்பான அறிவிப்பை கொசாவோ நாடாளுமன்றத்தில் பிரதமர் ஹசீம் தாஸி வெளியிட்டார். அவர் கூறுகையில், இது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தினம். இன்று முதல் கொசாவோ தனி நாடு, சுதந்திர நாடு, பெருமைக்குரிய நாடு. இனிமேல் பெல்கிரேட் எங்களைக் கட்டுப்படுத்த முடியாது என்றார்.
சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கொசாவோ முழுவதும் உற்சாகம் பொங்கி வழிகிறது. அல்பேனியர்கள் பட்டாசுகள் வெடித்தும், ஊர்வலம் சென்றும் கொண்டாடினர்.
ஐ.நா. மற்றும் அமெரிக்காவின் வழிகாட்டுதலின்படி கொசாவோ தனி நாடாக மாறியுள்ளது.
ரஷ்யா எதிர்ப்பு:
கொசாவோ தனி நாடாக மாறியதை ரஷ்யா எதிர்த்துள்ளது. இது தேவையில்லாத பல பிரச்சினைகளுக்கு வழி வகுக்கும். எனவே இதை ஐநா. அங்கீகரிக்கக் கூடாது என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
இதேபோல செர்பியாவும், கொசாவோ விடுதலையை அங்கீகரிக்க மறுத்து விட்டது. கொசாவோவை நாங்கள் ஒருபோதும் தனி நாடாக ஏற்க மாட்டோம் என்று செர்பிய அதிபர் போரிஸ் டாடிக் கூறியுள்ளார்.
இதற்கிடையே, கொசாவோவில் செர்பிய சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறைகள் வெடிக்கக் கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
சுதந்திர கொசாவோ நாட்டுக்கு இங்கிலாந்து 1,000 வீரர்களைக் கொண்ட அமைதிப் படையை அனுப்பவுள்ளது.












Click it and Unblock the Notifications