அமிதாப் வீடு மீது பீர் பாட்டில் வீச்சு
மும்பை: சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் வீட்டின் மீது பீர் பாட்டில் வீசப்பட்டதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராஜ் தாக்கரே வட இந்தியர்களை கடுமையாக தாக்கிப் பேசியதால், அவரது கட்சியினர் வட இந்தியர்களைக் குறி வைத்து தாக்குதலில் இறங்கினர். மும்பை, புனே, நாசிக் ஆகிய நகரங்களில் வட இந்தியர்களை ராஜ் தாக்கரே கட்சியினர் தொடர்ந்து தாக்கி வருகின்றனர்.
இதனால் ஆயிரக்கணக்கான வட இந்தியர்கள் மும்பை உள்ளிட்ட நகரங்களிலிருந்து வெளியேறத் தொடங்கினர்.
இந்த நிலையில் அமிதாப் பச்சனையும் ராஜ் தாக்கரே பேசியதால் அவரது கட்சியினர் அமிதாப் பச்சன் வீட்டின் மீது சோடா பாட்டிலை வீசினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில், நேற்று மாலை அமிதாப் பச்சன் வீட்டின் மீது பீர் பாட்டில்கள் வீசப்பட்டன.
ஜூஹு கடற்கரையில் உள்ள அமிதாப்பின் வீட்டில் இந்த தாக்குதல் நடந்தது. சம்பவத்தின்போது அமிதாப் குடும்பத்தினர் யாரும் வீட்டில் இல்லை என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications