தெலுங்கு தேசத்தில் கோஷ்டி பூசல்-ரோஜாவுக்கு எதிராக போர்க் கொடி
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: தெலுங்கு தேசம் கட்சிக்குள் கோஷ்டி பூசல் வெடித்துள்ளது. நடிகை ரோஜாவை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என கட்சி நிர்வாகிகள் பலர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சியின் மாநில மகளிர் அணித் தலைவியாகவும், நகரித் தொகுதியின் பொறுப்பாளராகவும் இருக்கிறார் ரோஜா.
இந் நிலையில் புத்தூரில் தெலுங்குதேசம் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க ரோஜாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் ரோஜா அங்கு செல்லவில்லை.
அது மட்டுமின்றி நகரிப் பகுதியைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகளையும் அந்தக் கூட்டத்திற்கு போக தடை விதித்தார்ய
இதையடுத்து ரோஜாவை தெலுங்குதேசம் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
கட்சிக்குள் அவர் கோஷ்டிப் பூசலை வளர்த்து வருவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.













Click it and Unblock the Notifications