பிளஸ் டூ: 'பிட்' அடித்த மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு
Subscribe to Oneindia Tamil
சென்னை: பிளஸ் டூ தமிழ் முதல் தாள் தேர்வில் பிட் அடித்து பிடிபட்ட 5 மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத தேர்வு துறை உத்தரவிடப்பட்டுள்ளது.
பிளஸ் டூ தேர்வுகள் கடந்த 3ம் தேதி தொடங்கின. மாணவர்களை கண்காணிக்க பறக்கும் படை, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 'முறைகேடாக நடக்கும் மாணவர்கள் மீது நடவடிக்கை பாயும்' என்று தேர்வு துறை எச்சரித்தது.
இந் நிலையில், தமிழ் முதல் தாள் தேர்வில், நெல்லை மாவட்டம் குருவிகுளம் மையம் உள்பட தமிழகம் முழுவதும் 5 மாணவர்கள் பிட் அடித்தபோது பிடிபட்டனர்.
'தமிழ் முதல் தாளுக்குரிய தேர்வினை 5 பேரும் மீண்டும் எழுத வேண்டும். இவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் பட்டியலில் தமிழ் முதல் தாளுக்குரிய மதிப்பெண் குறிப்பிடபடாமல் இருக்கும்' என்று தேர்வு துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications