முல்லைப் பெரியாறு: கேரளாவுக்கு 4 மாத கால கூடுதல் அவகாசம்
டெல்லி: முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கில் கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது. அதேசமயம் இதுதொடர்பாக சுப்ரமணியம் சுவாமி மற்றும் கேரள அமைப்பு தாக்கல் செய்த மனுக்களை அது தள்ளுபடி செய்து விட்டது.
முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை அதிகரித்துக் கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி அளித்து கடந்த 2006ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்பபளித்தது. ஆனால் அதை முடக்கும் வகையில் கேரள அரசு அவசரச் சட்டத்தைப் பிறப்பித்தது.
இதை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் அரிஜித் பசாயத், டி.கே.ஜெயின், தாக்கூர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது கேரள அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பட்வாரியா, கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் தேவை என்று கோரிக்கை விடுத்தார்.
இதை ஏற்ற உச்சநீதிமன்றம், ஜூலை 3வது வாரத்திற்கு வழக்கை ஒத்தி வைத்து அன்றைக்குள் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது.
சு.சுவாமி மனு தள்ளுபடி:
இந்த நிலையில் கேரளாவைச் சேர்ந்த ஜனசக்தி என்ற அமைப்பு புதிய அணை கட்ட அனுமதி தர வேண்டும் என்று கோரியும், ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி, உச்சநீதிமன்றத் தீர்ப்பை கேரள அரசு அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிடக் கோரியும் தாக்கல் செய்த மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்து விட்டனர்.
-
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications