கொடுஞ்சாலையான செங்கோட்டை-புளியரை நெடுஞ்சாலை
செங்கோட்டை: நெல்லை மாவட்டத்தையும், கேரளாவையும் இணைக்கும் செங்கோட்டை - ஆரியங்காவு நெடுஞ்சாலை மகா மோசமாக உள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலையில் செங்கோட்டை, புளியரை, ஆரியங்காவு பகுதி சாலைகளை மேம்படுத்த மத்திய அரசு ரூ. 3.72 கோடி ஓதுக்கீடு செய்து பல மாதங்களாகியும் பணிகள் துவக்கவில்லை. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலையான இந்த வழித்தடம் தற்போது கொடுஞ்சாலையாக மாறிவிட்டது. திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலை கேரள-தமிழகத்தை இணைக்கும் முக்கிய சாலையாகும்.
செங்கோட்டை புளியரை வழியாக தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட சரக்கு லாரிகள் சென்று வருகின்றன. இதனால் இந்த சாலை எந்த நேரமும் பிசியாக இருக்கும். ஆனால் பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாததால் வாகனங்கள் செல்லும் தகுதியை முற்றிலும் இழந்து விட்டது.
மோசமான இந்த சாலையில் புளியரை எஸ் வளைவு மற்றும் ஆரியங்காவு பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் பல மணி நேரம் நெரிசலில் சிக்கி தவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.
ஒரு நெடுஞ்சாலை, அதிகாரிகள் மற்றும் அரசுகளின் அலட்சியத்தால் கொடுஞ்சாலையாக மாறியுள்ளது.












Click it and Unblock the Notifications